Friday, September 26, 2008

இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்


மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன்
புதிதாய் பிறந்தேன்


இதுவரை காதலை இதயத்தில் பூட்டினேன்
இதயத்தை திறக்கின்றேன் விடுதலை தருகிறேன்
வெக்கங்கலின் ரகசியம் உணர்ந்தேன்
அந்த நொடியினில் உனக்குள்ளே தொலைந்தேன்
உயிர் தேடல் எழுகின்ற கூடல் நூலகத்தில்
உன்னிடம் நான் படித்தேன் படைத்தேன்

இரவெல்லாம் சூரியன் ஒளிர்வதை காண்கிறேன்
பகலெல்லாம் பனித்துளி சிதறியும் சேர்க்க்கிறேன்
நீ அருகினில் இருக்கின்ற நேரம்
மின்னல் அருவிகள் நரம்பினில் பாயும்
தினம் மோதல் நிகழ்கின்ற காதல் போர்க்களத்தில்
உன்னிடம் நான் வீழ்ந்தேன் எழுந்தேன்

மனசுக்குள் மனசுக்குள் புது மழை விழுகிறதே
முழுதாய் நனைந்தேன்
கருவிழி இரண்டுமே கருவரை ஆகிறதே
உனை நான் சுமந்தேன்
ஒரு காதல் எனும் புயல் நெஞ்சில் வீசியதால் அழகானேன்
புதிதாய் பிறந்தேன்

No comments: