Saturday, September 27, 2008

உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் எந்நநமொ பேச்சிருக்குது



சோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
கண்ணாளனை கண்டால் என்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணா ஜோடி குயில் மாலை இடுமா இல்லை ஓடி விடுமா?
கண்ணே நான் இருக்க சோகம் என்னம்மா ? கங்கை வற்றிவிடுமா ?
உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் எந்நநமொ பேச்சிருக்குது
கல்யாணமாம் கச்சேறியாம் தாங்காதடி நெஞ்சு
கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளித்து மீன் இருக்குது


உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா?
உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா?
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே
நீர் வடிய நான் பொறுக்கல்லே
பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி..
காவலுக்கு நாதி இல்லையா என்னாளும் காதலுக்கு நீதி இல்லையா

சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
என் தேவியைக் கண்டாலென்ன
என் வேதனை சொன்னாலென்ன
நல் வார்த்தைகள் தந்தாலென்ன
சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்

No comments: