Monday, September 22, 2008

நடந்த கதை நினைவில்லையோ நானுனை சேர மனம் இல்லையோ



நினைத்தது யாரோ நீ தானே தினம் உன்னை பாட நான் தானே
பாட்டுகொரு ஒரு தலைவன் நீ
ஏட்டுக்கொரு ஒரு கலைஞன் நீ
ஏற்றுக்கொள் என்னை என்னுயிரே


இணைந்த புறா பறந்ததென்ன ?
இமைகளை கண்கள் மறந்ததென்ன ?
நடந்த கதை நினைவில்லையோ நானுனை சேர மனம் இல்லையோ
இருவரின் பாதை ஒரு வழி போகும்
இனி வரும் காலம் இருவரை சேர்க்கும்
வரம் தர வேண்டி தவம் இருந்தேன்
வழியினை பார்த்து தனித்திருந்தேன்
பதில் தர வேண்டும் அன்பே

நினைப்பது நான் தான் நீ இல்லையே
மறந்தது நீ தான் நான் இல்லையே
வாழ்க்கை இங்கே கனவுகள் தான்
கனவுக்குள் ஏது ஓர் கனவு
கவிதை எல்லாம் வார்த்தைகள் தான்
வார்த்தையில் ஏது காதல் வரி?
மயக்கத்தில் வாழ்ந்தேன் மங்கையினாலே
மறுபடி தெளிந்தேன் மதுவினில் நானே
இனிமேல் எந்தன் புதிய வழி இதுதான் என்று புரிந்ததடி எனை தொடராதே பெண்ணே

நினைப்பது நான் தான் நீ இல்லையே
மறந்தது நீ தான் நான் இல்லையே
நீ தானே மறந்தாலும்
நினைவினில் நான் அழிந்தாலும்
நடந்தது யாவும் நடந்தவை தான்

No comments: