Monday, September 22, 2008

எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ



பேருந்தில் நீ எனக்கு ஜன்னலோரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்லக்கோபம்
ஆளில்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

பயணித்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
புகைப்படம் எடுக்கையில் தினரும் புன்னகை
அன்பே அன்பே நீதானே
அடைமழை நேரத்தில் பருகும் தேனீர்
அன்பே அன்பே நீதானே
தினமும் காலையில் எனது வாசலில்
கிடக்கும் நாளிதழ் நீ....தானே

[பேருந்தில் நீ....]

தாய்மடி தருகிற அரவனைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
தேய்பிறை போல்தொடும் நகக் கனுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
செல்போன் சினுங்கிட குவிகிற கவனம்
அன்பே அன்பே நீதானே
பிடித்ததும் தருகிற பரிசு பொருளும்
அன்பே அன்பே நீதானே
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை
ரசிக்கும் வாசகன் நீ....தானே

[பேருந்தில் நீ....]

No comments: