Monday, September 22, 2008

1-2-98 உன்னை சந்தித்தேன்


ஒண்ணு ரெண்டு தொன்னூத்தெட்டில் உன்னை சந்தித்தேன்
உன்னை சந்தித்தேன் நான் என்னை சிந்தித்தேன்
நிலவென்று சொல்ல மாட்டேன் தேய்ந்து விடுவாய்
நிழல் என்று சொல்ல மாட்டேன் நீங்கி விடுவாய்
உறவென்று சொல்ல மாட்டேன் விலகி விடுவாய்
உயிர் என்றும் சொல்ல மாட்டேன் பிரிந்து விடுவாய்

*** ஒண்ணு ரெண்டு தொன்னூத்தெட்டில் ****

நினைவில் என் நினைவில் நீங்காமல் நீதான் வாழும் ஓவியம்
மழையில் உன் மழையில் நான் நனைவது போலே ஏதோ ஞாபகம்
நீ கிடைத்த சேதியில் நெஞ்சம் அலை மோதும்
நான் படுத்து தூங்கவே உந்தன் நிழல் போதும்
நாணம் மானம் எல்லாம் இழந்தேன்
உன்னாலே தானே மீண்டும் எழுந்தேன்

***ஒண்ணு ரெண்டு தொன்னூத்தெட்டில் ****

யாரும் அறியாமல் ஒரு பாவையின் பூ மனம் காதலில் மருகியதெ
ஓசை இல்லாமல் என் ஊனும் உயிரும் ஒன்றாய் ஊரிகியதே
காற்று வீசும் மாலையில் காத்திருக்கும்
கண்ணா எந்தன் காதலை காதில் பேச வேண்டும்
காட்டும் அன்பில் என்னை மறந்தேன்
உந்தன் மூச்சில் நானும் கரைந்தேன்

***ஒண்ணு ரெண்டு தொன்னூத்தெட்டில் ****

1 comment:

Anonymous said...

Sema song