Tuesday, September 30, 2008

என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன? உன் நினைவில் காலம் கரைந்ததென்ன?காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே,



வானம் தூவும் பூ மழையே, பூமி பூத்த பொன் மலரே,

சாரல் தரும் மேகம் நீதான், காதல் தரும் வேதம் நீதான்,
இழந்தது கிடைத்தது, இதயமே சிரித்தது,
பார்வை தரும் பாவை நீதான் , பாசம் தரும் பூவை நீதான்,
நேர்விழி தந்தது , வாழ்க்கையில் ஆரம்பம்,

மழை துளிகள் மண்ணில் விழுந்ததென்ன?
எனக்குள்ளே மின்னல் எழுந்ததென்ன?
கண்களில் தீ பொறி வைத்தது யாரடி?
என் விழிகள் தூக்கம் மறந்ததென்ன?
உன் நினைவில் காலம் கரைந்ததென்ன?
காதல் என் வாழ்க்கையில் காவியம் ஆனதே,

உன் வளை ஓசை கேட்கும் என்று,
நானும் காத்திருந்தேன்,
உன் குரல் ஓசை கேட்டதுமே,
குயில் ஓசை நான் மறந்தேன்,

பனித்துளிகள் புல்லில் படிகின்றதே,
தேன் துளிகள் பூவில் வழிகின்றதே,
இயர்க்கையில் அதிசயம், இளமையில் ரகசியம்,
விண் மீன்கள் மண்ணில் முளைக்கின்றதே,
மின்மினிகள் கண்ணில் பறக்கின்றதே,
ஈர் உடல், ஓர் உயிர் ஆனதே, காதலில்,

பார் முகிலாய் நான் காத்திருந்தேன்,
என் தேகம் தேன் கசிய,
உன் உயிர் ஓசை கேட்டதுமே,
பூந்தேன், மழையாய் பொழிந்தேன்,
வாழும் வாழ்க்கை உன் மடியில்,
நாளும் தோன்றும், பொன் விழியில்

No comments: