Friday, September 26, 2008

மனம் காலடி ஓசையாய் எதிர் பார்த்து துடிக்கின்றது


ஆசை நாயகனே சௌக்கியமா
உந்தன் நலம் நாடும் பிரியமானவளின் கடிதம்

உன் மார்பில் விழி மூடி தூங்குக்கிறேன்
தினமும் கனவில்
உன் ஆசை முகம் தேடி ஏங்குகிறேன்
விடியும் பொழுதில்

எந்தன் வளையல் குலுங்கியது கொலுசும் நழுவியது
வெட்கததில் கன்னங்கள் கூசியது
மனம் காலடி ஓசையாய் எதிர் பார்த்து துடிக்கின்றது
அன்பே !

சின்ன குயில்கள் உனை உனை நலம் கேட்குதா?
நெஞ்சில் பரவும் அலை அலை உனை ஈரம் ஆட்குதா ?
மெல்ல நகரும் பகல் பகல் யுகமானாதா?
மூச்சு விட்டதால் தலையணை அது தீயில் வெகுதா?

நெஞ்சம் எதிலும் ஒட்டாமல் கண்ணில் கனவும் வற்றாமல்
தினமும் தினமும் உருகும் மனது
ஏன் இந்த நிலைமை தெரியவில்லை
இந்த பரவசம் உனக்குள்ளும் இருக்கிறதா ?
அன்பே !

காலை வெயில் நீ பனி துளி இவள் அல்லவா
என்னை குடித்து இனி இனி உன் தாகம் தீர்க்க வா
துள்ளும் அலை நீ இவள் அதில் நுரை அல்லவா
இருவருக்கும் இனி இடைவெளி இல்லை அல்லவா
நிலவில் வேகும் முன்னாலே வருவாய் எந்தன் முன்னாலே
அழகும் உயிரும் உனக்கே சொந்தம்
ஏராளம் ஆசை நெஞ்சில் உண்டு
அதை எழுதிட நானங்கள் தடுக்கிறதே
அன்பே !

No comments: