Wednesday, September 24, 2008

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுது



தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில் ஷென்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியொடு என்று சொன்னாய்
வார்த்தை தவறிவிட்டாய் அடி
கண்ணம்மா மார்பு துடிக்குது அடி

பார்த்த இடத்தில் எல்லாம் உன்னைப் போலவே
பாவை தெரியுது அடி
பாவை தெரியுது அடி

மேனி கொதிக்குது அடி
தலை சுற்றியே வேதனை செய்குது அடி
வானின் இடத்தையெல்லாம் இந்த வெண்ணிலா
வந்து தழுவுடு பார்
மோனத்து இருக்குது அடி இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
நான்ஒருவன் மட்டிலும்
பிரிவு என்பதோர் நரகத்துழழுவதோ

No comments: